திங்கள், 7 பிப்ரவரி, 2011

கரையோரம்

கோடைவிடுமுறையில்
கொளுத்தும் வெயிலில்
உன் முதுகில் நடந்த
ஞாபகங்கள்...

அளவில்
பெரிதாக இருந்தாலும்
அடுபெரிக்க
ஆத்தாசெருப்பை
மாட்டிகொண்டு
சுள்ளிபொருக்கையிலே
எத்தனைமுறை
கீரியிருப்பாய்...

பருவப் பெண்ணென்றும் 
பாராமல்
எத்தனைமுறை 
அந்த
அக்கா தாவணி
இழுத்திருப்பாய் ...

முந்தாநாள் கூட
முந்தானை இழுத்தியமே!

நீ 
எதை செய்தபோதும் 
ஆலமர விழுதில் 
ஆடிய ஊஞ்சல் 
மறப்பேனா?

அடிமரம் ஏறமுடியாமல்
அழுது தவித்ததை
மறப்பேனா?

அதிலிருந்து
விழுந்தபோது 
காயங்கள் கண்டுகொள்ளாமல் 

கால்சட்டை கிழிந்ததில் 
கருவாச்சி 
கலகலன்னு 
சிரிச்சத மறப்பேனா?

ஆட்டுகாளில்
அலைந்த களைப்பில்
கிழிந்த துண்டில் 
தலைசாய்க்க
கிறுக்கச்சி
கில்லிவிட்டுபோனத 
மறப்பேனா?

பாட்டி பல்லாங்குழி
விளையாட...

அக்காமக அஞ்சாங்கல்லு
விளையாட ...

பெருசுகள் கூடி 
வீட்டுக்கதை 
ஓராயிரமிருக்க...
ஊர்கதை பேச 
ஊருக்குள்ள சண்டை 
ஒண்ணுரெண்ட சொல்லு ...

எல்லாம்
மறந்துபோனாலும்

உன் 
கரையில் கிடந்த
புத்தகத்தில் 

என் 
உயிர் முடிச்சி 
அவிழ்ந்த கதை...

ஊரறியாமல்...

இன்னும் 
உள்ளுக்குள்ள 
கிடக்கு 

சுமைதாங்கி 
கல்லாய்...        

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக