திங்கள், 7 பிப்ரவரி, 2011

இன்னும் 
பதில் சொல்லமுடியவில்லை 
அழுதவிழி
துடைத்துக் கொண்டு
நீ சென்றாய்...

அரசாங்க பேருந்தில்
ஐந்துமணிநேரம் பயணப்பட்ட
அடக்கமுடியாத
என் கண்ணீரை!

வட்டிக்கு பணம் கொடுத்தவனின்
வலதுகை தொட்டு துடைத்து
வட்டிகட்டாமல்
வடிக்காதே!
கண்ணீரை என்றது...

விமானமேறி
வேலையிடம்  வந்தபிறகும்
இன்னும்
பதில் சொல்லமுடியவில்லை

எப்போ!
வருவிகென்று
என் முகம்
உரசிபோன
உன் முந்தானைக்கு...        









1 கருத்து: