சனி, 23 ஏப்ரல், 2011

ஒப்பாரி பாடல்

தந்தநானே தானநன்னே
தந்தநானே தானநன்னே
தந்தானே தானநன்னே      
தானநன்னே   தந்தநானே

வானம் கருத்திருக்கு 
வட்டநிலா வாடிருக்கு 
எட்டருந்து பாடுறேனே
எங்கப்பா எங்கபோன?

 சிங்க தெருவெல்லாம் 
 சிந்தி அழுகிறேனே 
சிங்கார சிங்கபூர 
கண்ணீரில் கழுவுறேனே 

வட்டிகடன் வாங்கி 
வாக்கப்பட்டு போறவள 
வாசலோடு நிக்கவச்சி 
வந்துநானும் சேர்ந்தேய்யா

வட்டிகடன் கட்டி 
வண்டியில சாமான்வாங்கி 
வந்தவக வாயடக்க 
வரிசை கொடுத்தேன்ய்யா 

பக்கவாதம் வந்து 
பாலகனா போனவரே 
தொண்டைகுழி  விக்கி 
தொலைதூரம் போனதேனோ?

போனமகன் வரலயான்னு 
பொறுக்கலையா உன்னுசுரு 
புள்ளகொல்லி விழாம 
போனதய்யா உன்னுசுரு  ....                                                        
 

திங்கள், 4 ஏப்ரல், 2011

நேரமில்லை


கொசுக்கள் 
நசுக்கியே 
கொலை பழிச் 
சுமந்தவளே...

எறும்புகள் 
எனைகடிக்க 
உன் மார்புகள் 
அழுமே ... 

கால்பவுனுத் தாலியையும் 
கழட்டிக் கொடுத்தே 
மஞ்சள் கையிற்றை 
மாராப்புக்குள் ஒளித்தவளே...!

அடுக்குப் பானைக்குள் 
அஞ்சும், பத்துமாய் 
அழுக்கு படிந்துகிடந்த 
ரூபாய் நோட்டுக்களை...

நான் 
ஊர்விட்டுப் புறப்பட 
உள்ளங்கையில்  
தினித்தவளே...!

ஒரு நாள் 
ஊரிலிருந்து 
வந்தவன்
சொன்னான் ...

உங்க 
அம்மாவுக்கு 
உடம்புக்கு
முடியலன்னு ...

காகிதத்தில் 
கால்வைத்தப் பேனா 
'அ'வென எழுதும்முன்னே 
அலறிவிழுந்தது...

உன் 
மரணச் செய்தியை 
தாங்கிவந்த 
ஒரு தபாலை 
உடைத்ததில்...

எனக்காக 
ஆற்றுமணலில் 
அழுதுகொப்பளித்த 
கால்களை 
அதற்குள் கட்டியிருப்பார்களோ...!  

இல்லை 

எனக்காக...
சில்லறைக் காசுகளை 
முடிந்த முந்தானையை 
கிழித்து எள்ளும், தண்ணியும் 
இறைத்திருப்பார்களோ...!

இல்லை...  

நேரமில்லன்னு 
அங்கும் பங்காளிகள் சொல்ல 
இந்நேரம் 
இடுகாட்டுக்குள் 
இறக்கி வைத்திருப்பார்களோ ..!

எண்ணியவாறே 
இறங்கிய நான் 
இடறிவிழுந்ததில்...

எரிந்து முடிந்த
ஊதுபத்தியும் ...

உடைந்து சிதறிய 
ஒடுகலுமே..!

 அம்மா.. 
நான் இப்பொழுது 
உன் கல்லறையில் 
விளககுவைக்கும்
என் மகனிடம் 
சொல்வதே இல்லை  

பெரிதானால் 
வெளிநாடு போவென்று....