திங்கள், 12 நவம்பர், 2012

எழுவாய்


                           

நீ

ஏரோட்டி

பழகியவந்தானே!

எரிபடை விழுந்ததிற்கா

எல்லாம் முடிந்துவிட்டதென்று

முனகுகிறாய்?

 

இது

நீஉழுத காயமென்று

உறுதிகொள்….

 

நீ

பரம்படிக்க

பழகியவந்தானே!

பின்யெனடா

குண்டுகள் விழுந்த

குழிகளைக்கண்டு கூனுகிறாய்?

 

யானைகளை

பிடிப்பதற்குதானே!

குழிகளைப் பறிப்பார்கள்….

 

நீ யானையென்று

எதிரிக்கு தெரிந்திருகிறது

உனக்கு ஏன்

அது இன்னும்

புலப்படவில்லை?

 

ஆடையில்லாமல்

புதைக்கபட்டோமென்றுதானே!

அழுகிறாய்….

 

விதைகளை

எப்பொழுதும்

ஆடைகட்டி

அடக்கம் செய்ய முடியாது…

நீ விதை

 

மண்ணை

மயாணக்காடென்று

ஒருபொதும்

ஒதிக்கிவிடாதே!

 

மண்

புழுவின்

அசைவிற்கே

பொதி பொதியாய்க்

கொட்டும் பொழுது…

 

ஆயிரமாயிரம்

விரல்களின் தோண்டலுக்கா

தோள்கொடுக்காது?

 

முட்டு, மோது;

மண்ணுக்கே

மரணபயத்தை உண்டாக்கு

 

தாயின்

பனிகுடத்தை

உடைத்து தரையில்

விழுந்தவந்தானே நீ

 

அப்படித்தான்

அப்படித்தான்

எழுவாய்… எழுவாய்..

 

நாளை

ஈழமண் இருக்கும்

உன் காலடியில்…