புதன், 11 ஏப்ரல், 2012

சுடர்



உன்னை
யார்வேண்டுமானாலும்
கொண்டாடிவிட்டுபோகட்டும்
என்னால்
அப்படி முடியாது...

உனக்கு
சுடரென்று
பெயர்வைத்தவன் யார்?

நீ
பாம்பைவிடவும்
பயங்கரமானவள்...

பாம்பு
தான் ஈன்ற
குட்டியைத்தான்
தின்று தீர்க்கும்

நீயோ!
உன் தாயான
திரியையே!
தின்றுவிடுகிறாய் ..

அப்படியென்றால்!

நீ
பாம்பைவிடவும்
பயங்கரமானவள்தானே

ஊதியனைத்தால்
உன்னுடம்பு நோகுமென்று
எத்தனைமுறை
என்வாய் அடைத்திருப்பால்
எந்தாய் செல்லம்மாள்...

ஆனால்
நீயோ!
உன் அகலவாய்திறந்து
என் பிஞ்சி விரல்பிடித்து
ஊட்டிக்கொன்டாயே
ஒரு நாள்
மயானகாட்டில்
ஞாபகம் இருக்கிறதா?

நீ
துரோகிஎன்பதற்க்கு
இந்த ஒரு
ஆதாரம் போதாதா?

குலசாமி கோவிளில்கூட
கற்பூரம் உனைத்தானே
கண்ணில் ஒற்றிகொண்டோம்..

ஏழை
எங்கள் குடிசைகளை
ஏப்பம்விட்ட தீயே
உன்னை சுடரென்று
என்னால் சுத்திகரிக்கமுடியாது.

செவ்வாய், 10 ஏப்ரல், 2012

அதையும் தாண்டி



வட்ட நிலா
பார்த்து
வடிவழகி
எம்பொண்ணு
மதிவதனி
சொன்னாளாம் ...

இந்த நிலா
நாஎங்கப் போனாலும்
எங்கூடவே
வருதுமான்னு

அப்பாதாம்மா
உன்ன பார்த்துக்கச் சொல்லி
அனுப்பியிருக்காருன்னு
எம்மனைவிச் சொல்ல...

அதற்க்கு
உடனே!
குழந்தை கேட்டாளாம்...

அம்மா
அந்தநிலா
பேசுமான்னு?

இவளும்
குழந்தைதானேன்னு
இம் பேசுமேன்னு
சொல்லிவைக்க

இல்லமா!
அது பேசாதுமா
அதுக்குதான்
வாயே இல்லையேன்னு
சொன்னதாம் குழந்தை...

அதையும்
சமாளிக்க
அவள் சொன்னாளாம்
அது அப்பாகிட்ட
மட்டும்தாமா
பேசுமுன்னு....

உடனே!
அப்பனா
நாசொல்லுட்டாமா
நிலாகிட்ட

அப்பாவ
சீக்கிரம் வரசொல்லுன்னு
என்றதாம் குழந்தை...

பாவம்
குழந்தைக்கு
எப்படித் தெரியும்

நான்
வட்டிக்கடநென்னும்
வலைக்குள்
சிக்கியிருப்பது..