புதன், 11 ஏப்ரல், 2012

சுடர்



உன்னை
யார்வேண்டுமானாலும்
கொண்டாடிவிட்டுபோகட்டும்
என்னால்
அப்படி முடியாது...

உனக்கு
சுடரென்று
பெயர்வைத்தவன் யார்?

நீ
பாம்பைவிடவும்
பயங்கரமானவள்...

பாம்பு
தான் ஈன்ற
குட்டியைத்தான்
தின்று தீர்க்கும்

நீயோ!
உன் தாயான
திரியையே!
தின்றுவிடுகிறாய் ..

அப்படியென்றால்!

நீ
பாம்பைவிடவும்
பயங்கரமானவள்தானே

ஊதியனைத்தால்
உன்னுடம்பு நோகுமென்று
எத்தனைமுறை
என்வாய் அடைத்திருப்பால்
எந்தாய் செல்லம்மாள்...

ஆனால்
நீயோ!
உன் அகலவாய்திறந்து
என் பிஞ்சி விரல்பிடித்து
ஊட்டிக்கொன்டாயே
ஒரு நாள்
மயானகாட்டில்
ஞாபகம் இருக்கிறதா?

நீ
துரோகிஎன்பதற்க்கு
இந்த ஒரு
ஆதாரம் போதாதா?

குலசாமி கோவிளில்கூட
கற்பூரம் உனைத்தானே
கண்ணில் ஒற்றிகொண்டோம்..

ஏழை
எங்கள் குடிசைகளை
ஏப்பம்விட்ட தீயே
உன்னை சுடரென்று
என்னால் சுத்திகரிக்கமுடியாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக