வெள்ளி, 16 மார்ச், 2012

திறவுகோல்களை ஏற்காத பூட்டுகள்


நீயும்
பனிக்குடம் உடைத்து
தொப்புல் கொடியறுத்தவல்தான்
இந்த காற்றை
நுரையிரளுக்குள்
நுழைக்குமுன்பு ...

எனக்காகவும்
இன்னும் இரண்டு
அக்கா, தங்கைக்காகவும்
கசக்கும் காயங்களை
கண்மூடி உருட்டி உருட்டி ..
தின்றவள்தான் நீ

எங்கோ
பிறந்து
என் அப்பனுக்காக
அழுது, அறுத்து;
நொந்தவள்தான்
ஒப்புகொள்கிறேன் அம்மா
உன் உழைப்பை...

அன்று
என்பாட்டிக்கும்
உனக்கும்
பிடித்துகொல்லாமல்
போனதாம்!

நீ மருமகளாகவும்
அவள் மாமியாராகவும்
இருந்தபோது...

நேற்றுவரை
மருமகளாக இருந்த நீ
இன்று புதிதாக
பதவிஎற்றுக்கொண்டாய்
மாமியாராக

என் திருமணத்தில்    

ஏன் பெண்களே !
இன்னும்
திறவுகோல்களை
ஏற்காத பூட்டுகலாய்
தினம் வாழ்கிறிர்கள்?