செவ்வாய், 3 மே, 2011

வேண்டுதல்

அக்கினி 
சட்டிதுக்கியும் 
பால்குடமெடுத்தும்...

மாரியாத்தாளுக்கு 
நேந்துகிட்டார்கள்
மழைவேண்டி... 

வேப்பமரங்களை 
மொட்டையடித்தவாறே!

கேள்வி

அக்கா ...
ஓணானஅடிச்சி 
பொதச்சி வச்சக்காசு
ஒன்னு ரெண்டாயிருக்குமா?

இல்ல... 
குண்டுமழை பொழிந்ததில் 
ஓணான் செதஞ்சி 
ஒத்தகாசு 
ஒடஞ்சி ரெண்டாயிருக்குமா?

இடம் விட்டுஇடம்

அம்மா...
அண்ணனைப்போல் 
என்னையும் 
ஊனமாய் 
பெற்றிருக்க கூடாதா ?

இப்படி
அகதிகளாய் 
அலைவதைவிட 

என் 
தேசச் சூட்டில் 
செத்து 
மடிந்துபோயிருப்பேனே!..  

ஈழம்

சூரியன்
வரையத்தான்
தூரிகை
எடுக்க முயற்ச்சித்தோம்...

தூரிகையைத் 
தூக்கவே!
இப்படி  
துப்பாக்கியை 
தூக்கிச் சுமக்கிறோம்...