செவ்வாய், 26 மார்ச், 2013

மிதிபடும் பூக்கள்



தேன்கூடு தேசமென்றே தேடிவந்து பூத்தாயே 
வான்முட்டி மண்பார்த்து வாழ்ந்திடவே -தேன்மொழியே 
பெண்ணுடலை கூறுபோடும் பேய்நிறைந்த என்நாடு 
பண்கெட்டே  போன பரப்பு

ஆசை

அவள்
தொட்டு தூக்கவும்
நீட்டிய கால்களின்
இடுக்கில் குப்புறபோட்டு
குளிப்பாட்டி போட்டுவைக்கவும் ...

கார்த்திகை, மார்கழி
குளிரில்
அவள் கைகளுக்குள்
எனை அனைத்து
போர்வை போத்தவும் ...

பொழுது விடிஞ்சி
எழுந்து பார்க்கையில்
நான் அவள்
பக்கத்தில் இல்லாதபொழுது
அழுது அடம்பிடிக்கவும் ....

உனக்கு
உடம்புக்கு முடியலயாடா?
ஆசுபத்திரிக்கு போய்
காட்டிகிட்டு வருவோமுன்னு
வீட்டுக்கும், தண்ணீர் கட்டைக்கும்
போய் போய் வரவும்....

அழாதடா
இந்த
கொஞ்ச மருந்தையும்
குடிச்சிடு ...

யாரு உன்ன
அடிச்சா?
மகாம்மாவா?

மகாம்மா பேச்ச
நம்ம காய் விட்டுடுவோமுன்னு
சொல்லவும்...

எல்லா நேரமும்
அவளோட
பிஞ்சி இடுப்பில்
பிள்ளையாய் அமர

மரப்பாச்சி
பொம்மையாகப்போறேன்
என் மகள்
மதிவதனி விளையாட ....