செவ்வாய், 10 ஏப்ரல், 2012

அதையும் தாண்டி



வட்ட நிலா
பார்த்து
வடிவழகி
எம்பொண்ணு
மதிவதனி
சொன்னாளாம் ...

இந்த நிலா
நாஎங்கப் போனாலும்
எங்கூடவே
வருதுமான்னு

அப்பாதாம்மா
உன்ன பார்த்துக்கச் சொல்லி
அனுப்பியிருக்காருன்னு
எம்மனைவிச் சொல்ல...

அதற்க்கு
உடனே!
குழந்தை கேட்டாளாம்...

அம்மா
அந்தநிலா
பேசுமான்னு?

இவளும்
குழந்தைதானேன்னு
இம் பேசுமேன்னு
சொல்லிவைக்க

இல்லமா!
அது பேசாதுமா
அதுக்குதான்
வாயே இல்லையேன்னு
சொன்னதாம் குழந்தை...

அதையும்
சமாளிக்க
அவள் சொன்னாளாம்
அது அப்பாகிட்ட
மட்டும்தாமா
பேசுமுன்னு....

உடனே!
அப்பனா
நாசொல்லுட்டாமா
நிலாகிட்ட

அப்பாவ
சீக்கிரம் வரசொல்லுன்னு
என்றதாம் குழந்தை...

பாவம்
குழந்தைக்கு
எப்படித் தெரியும்

நான்
வட்டிக்கடநென்னும்
வலைக்குள்
சிக்கியிருப்பது..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக