திங்கள், 7 பிப்ரவரி, 2011

எப்படி வரும்
மனசு... 
ஆண்டுதோறும் 
மாரியாத்தாளுக்கு
மாவிளக்கு
மாவிளைதோரணம்
பாரதபாட்டுமாய்
அமக்களப்படும்...

கடைசி நாளன்று
கழுகுமரமேரி
பூசாரி ஒருத்தன்
எலுமிச்சம்பழம்
உருட்டிவிடுவான்

கல்யானமாகத பெண்கள்...
குழந்தையில்லாத பெண்கள்...
ஈரத்துணியோடு
மடியேந்துவார்கள்
மனசு வலிக்கும்

ஆண்டுகள் ஐந்தாகியும்
மாரியாத்தாளுக்கு
மனசு வரலயென்பார்கள்
போன நான்கு வருடமா
மடியேந்திய அதே பெண்கள்
இந்த வருடமும்...

மருமகளிடம்
வரதட்சணை கேட்கும்
மாமியார்களும்...

பெண் பிள்ளை என்றதும்
கருகளைப்பு
செய்ய சொல்கிற
மாப்பிள்ளைகளும்...
இருகின்றவரைக்கும்
மாரியாத்தாளுக்கு 
எப்படி
மனசுவரும்...  
         
a

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக