வியாழன், 10 பிப்ரவரி, 2011

தாலாட்டு பாடல்

ஆராரோ ஆரிராரோ..
ஆராரோ ஆரிராரோ..

ஓணாங் கொடிபிடிங்கி 
உட்கார ஊஞ்சல்கட்டி
பால கொடிபிடிங்கி
படுத்துறங்க தொட்டில்கட்டி 

பாலகொடுத்து நானும் 
பாய்போட்டன் படுத்துறங்க 
பாலகனே கண்ணுறங்கு 
பால்மாடு கத்துதடா...
                                                             ஆராரோ...
யானையில ஊர்வலமா
என் கண்ணே-உனக்கு
எண்ணிரெண்டு தாதிமாராம்...

குதிரையில ஊர்வலமா 
என் கண்ணே-உனக்கு 
குடைபிடிக்க தாதிமாராம்...
                                                             ஆராரோ...
மாமன்மக உன்னை
மணமுடிக்க கேட்டாளாம் 
அத்தமக உன்னை 
அள்ளிபோக கேட்டாளாம்

அரசாலும் சூரியனே!
அச்சாரம் போட்டிடுவோம்
அழாத கண்ணுறங்கு...

ஆடுங் கத்துதடா 
ஆட்டுக்குட்டி அலையுதடா
குட்டிபோட்ட ஆடுரெண்டு 
குசுகுசுன்னு பேசுதடா

                                                            ஆராரோ...
உச்சி வெயிலாச்சி 
ஊரெல்லாம் போயாச்சி 
மத்தியான சோத்துக்கு
மாமவர  நேரமாச்சி...

காலையில போனமச்சான் 
காடுவெட்டி வாரமச்சான்-நம்ப 
காள உரங்களையே-நான் 
களத்துமேடு போகலையே!
                                                             ஆராரோ...
 

 
 
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக