வியாழன், 4 அக்டோபர், 2012

மவுனம்

மவுனம் 

நெல்மணிகளின் 
மவுனம் 
வென்றுவிடுகிறது ...

தன்னை 
களத்துமேட்டில் 
அடித்து துவைத்தவனின் 
அடி வயற்றை 
நிறைத்து...

எப்பொழுதுமே !
பெரும்பாலான 
மவுனங்கள் 
வென்றுவிடுகின்றன...

ஆனால் 
என்ன பாவமோ 
தெரியல ...

கருவிலேயே 
தோற்றுவிடுகிறது 
பெண் சிசுவின் 
மவுனம் ...   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக