மவுனம்
நெல்மணிகளின்
மவுனம்
வென்றுவிடுகிறது ...
தன்னை
களத்துமேட்டில்
அடித்து துவைத்தவனின்
அடி வயற்றை
நிறைத்து...
எப்பொழுதுமே !
பெரும்பாலான
மவுனங்கள்
வென்றுவிடுகின்றன...
ஆனால்
என்ன பாவமோ
தெரியல ...
கருவிலேயே
தோற்றுவிடுகிறது
பெண் சிசுவின்
மவுனம் ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக